Friday, January 23, 2009

Good Thoughts - About Life


These good thoughts
were collected by Bob Hansen, formerly executive director of the Korean War Veterans Advisory Board and now executive director of the U.S. Botanical Garden National Fund. This previously appeared in Airborne Quarterly. There is something here for every one of us.


The most destructive habit Worry
The greatest joy Giving
The most endangered species Dedicated leaders
Our greatest natural resource Our youth
The greatest “shot in the arm” Encouragement
The greatest problem to overcome Fear
The most effective sleeping pill Peace of mind
The most crippling disease Excuses
The most powerful force in life Love
The most destructive pariah Gossip
The most incredible computer The human brain
The worst thing to be without Hope
The deadliest weapon The tongue
The two most powerful words Can do
The greatest asset Faith
The most worthless emotion Self-pity
The worst thing you can lose Self-respect
The most satisfying work Helping others
The ugliest personality trait Selfishness
The most beautiful attire A smile!
The most prized possession Integrity
The most contageous spirit Enthusiasm
The most powerful communication Prayer

To the world, you may be just one person;
but to one person, you may be the world!

Measure wealth not by the things you have, but by the
things you have for which you would not take money.

If you bring macaroni and cheese to a covered dish supper,
don't expect to dine on lobster and filet mignon.

A coffee grinder on sale at a 90% discount is
not a great buy if you don't drink coffee.

Sunday, January 18, 2009

சத்தியத்தைக் காப்பாற்றுவோம்! - செ.ஆகாஷ்ராஜ்


தில்லையம்பலம் எனப் படும் சிதம்பரத்தில் வசித்தவர் திருநீலகண்டர். மண்பாண்டத் தொழிலாளியான இவர், சிவனடியார்களுக்கு திருவோடு செய்து வழங்கி வந்தார். "திருநீலகண்டம்' என்று சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார். திருமணம் ஆகி மனைவியுடன் இனிய இல்லறம் நடத்தி வந்தார்.

ஒருமுறை, ஒரு பொது மாதுவைப் பார்த்த நீலகண்டர், அவளிடம் மனதைப் பறிகொடுத்து விட்டார். அவள் இல்லத்தில் தங்கியிருந்தார். இந்த விஷயம், நீலகண்டரின் மனைவிக்குத் தெரிந்து விட்டது.


"நானிருக்க, இன்னொரு பெண்ணைத் தொட்ட உம்மை இனி எந்நாளும் தொட மாட் டேன்; நீரும் என்னைத் தொடக் கூடாது. இது திருநீலகண்டனாகிய சிவபெருமான் மீது ஆணை...' என்று சொல்லி விட்டாள். இறைவன் மீதே ஆணையிட்டுச் சொன்ன பிறகு, அவளுடன் பெயரளவுக்கே இல் லறம் நடத்தி, வாழ்நாளைக் கழித்து விட்டார் நீலகண்டன்.


இந்த தம்பதியர் முதுமையையும் அடைந்து விட்டனர். ஒரு துறவியின் வடிவில் அந்த வீட்டிற்கு வந்த சிவபெருமான், தன் திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்தார்.


"மகனே! இது மிகவும் விலை உயர்ந்தது. இதில் ஒருமுறை பிச்சையிட்டு விட் டால், அன்று முழுக்க அதில் இருந்து உணவு வரும். எனக்கு மட்டுமின்றி, பிற சிவனடியார்களுக்கும் இந்த உணவு பயன்படுகிறது. இதை பத்திரமாக வைத்திரு. நான் வெளியூர் செல்கிறேன். திரும்ப வந்து பெற்றுக் கொள்கிறேன்!' என்று ஒப்படைத்தார்.


நீலகண்டரும் அதை வாங்கி பத்திரமாக வைத்தார். சில நாட் களில் அதை மறையச் செய்த சிவபெருமான், மீண்டும் வந்து திருநீலகண்டரிடம் திருவோட் டைக் கேட்டார். அது காணாமல் போனதை வருத்தத்துடன் சொன்ன நீலகண்டரை, நம்பாதவர் போல சிவபெருமான் நடித்தார். "நீ பெரும் ஆசைக் காரன். நீ தான் என் திருவோட் டைத் திருடிவிட்டாய்...' என்று திட்டித் தீர்த்தார். தான் அந்த ஓட்டை திருடவில்லை எனச் சொல்லிக் கதறினார் நீலகண்டர்.

"அப்படியானால் உன் மனைவியின் கரத்தைப் பற்றி கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி சத் தியம் செய்...' என சிவன் சொல்ல, தங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்தும், தன் மனைவியை தொட முடியாமல் இருப்பது குறித்தும் சிவனிடம் சொன்னார் நீலகண்டர்.


அவரிடம் ஒரு கம்பைக் கொடுத்த சிவபெருமான், கம் பின் இரு நுனிகளையும் பிடித்து நீரில் மூழ்குமாறு உத்தரவிட்டார். இருவரும் அவ்வாறு செய்யவே, முதுமை நீங்கி, இளமையுடன் எழுந்தனர். கரையில் நின்ற துறவியைக் காணவில்லை. பின்னர், ரிஷப வாகனத்தில் சிவபார்வதி அவர்கள் முன் காட்சி தந்தனர்.

சிவன் மீது செய்த சத்தியத்தைக் காப்பாற்ற, மனைவியை வாழ்நாள் முழுவதும் தொடாமல் வாழ்ந்தமைக்காக நீலகண்டரைப் பாராட்டிய அவர்கள், தம்பதியர் மீண்டும் ஒற்றுமையாக வாழ ஆசியளித் தனர். அவரது குருபூஜை தை மாத விசாகத்தன்று நடத்தப்படுகிறது.

வயது ஒரு தடையே அல்ல... எதற்கு? - - வைரம் ராஜகோபால்


"நல்ல காரியம் செய்தவன் ஒருநாளும் கெடுவதில்லை என்பது பகவான் வாக்கு. மனிதன் ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும். நல்ல காரியம் என்றால், பிறருக்கு பயன்படக் கூடியதான ஒரு காரியம். இதைப் பணத்தாலோ, பொருளாலோ, உடல் உழைப்பாலோ செய்யலாம்.


இப்போது செய்யப்படும் தானமோ, தர்மமோ... இப்போது பலன் அளித்தாலும் அளிக்கும் அல்லது வரும் ஜென்மாக்களிலும் அளிக்கலாம். வரும் சந்ததிகளுக்கும் கூட அந்த பலன் கிடைக்கலாம். தர்மம் என்றைக்காவது பலன் கொடுத்தே தீரும். குதிரை மீது ஏறி ஊரை சுற்றிப் பார்க்கப் போனான் ஒரு ராஜா. அப்போது, வயலில் தென்னங்கன்று ஒன்றை ஒரு வயதான கிழவன் நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.


அவர் அருகில் போய் குதிரையை நிறுத்தினான். "ஓய், பெரியவரே!' என்று கூப்பிட்டான். பெரியவர் எழுந்து ராஜாவை பார்த்து கும்பிடு போட்டு நின்றார். "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டான் ராஜா.


"இங்கே இரண்டு தென்னங் கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன் மகாராஜா!' என்று அவர் பதில் சொன்னார்.


உடனே, ராஜா சிரித்து விட்டு, "ஐயா! உமக்கோ வயது தொன்னூறு இருக்கும் போல் இருக்கிறதே! இந்த வயதில் தென்னங்கன்று நட்டு, அது காய்த்து தேங்காய் சாப்பிடலாம் என்று நினைக்கிறீர்களே! அதுவரையில் உயிர் வாழவும் ஆசைப்படுகிறீர்களே?' என்று கேட்டான். அதற்கு, அவர், "மகாராஜா, எனக்கு வயதாகி விட்டது என்பது தெரியும்; இந்தத் தென்னங் கன்றுகள் வளர்ந்து காய் காய்ப்பதற்கு இன்னும் பல வருஷங்கள் ஆகும் என்பதும் எனக்குத் தெரியும். அதுவரை நான் இருப்பேனா என்பதும் சந்தேகம் தான்.


"ஆனால், இந்தத் தென்னங் கன்றுகளை எனக்காக நடவில்லை. இந்தத் தென்னங் கன்றுகள் மரமாகி, பலன் தரும்போது என் பிள்ளைகள், பேர பிள்ளைகளும் அனுபவிப்பர். அவர்களுக்காகத்தான் இதை நடுகிறேன் ராஜா!' என்றார்.


சந்தோஷப்பட்டான் ராஜா. வரும் சந்ததியினருக்காக இப்போதே இவர் இப்படி ஒரு ஏற்பாடு செய்கிறாரே என்று மகிழ்ச்சியடைந்து, ஒரு பை பொற்காசுகளை அவரிடம் கொடுத்தான்.


அதாவது, இப்போது ஏதோ ஒரு நல்ல காரியம் செய்து விடு. அது தானமாகவோ, தர்மமாகவோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இதனுடைய பலன் யாருக்கு, எப்போது கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டிராதே! அதன் பலன் கொடுக்க வேண்டிய காலத்தில், யாருக்கு கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு கொடுத்து விடும்.


மனிதன் மனிதனை ஏமாற்றுவதுண்டு; தர்மம் என்றுமே ஏமாற்றாது. பலனைக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கும்.

Friday, January 16, 2009

ஒளவையார் நூல்கள் - ஆத்திசூடி

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அ·கம் சுருக்கேல்

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்
15. ஙப் போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட உரை
18. இடம்பட வீடு எடேல்
19. இணக்கம் அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செய்யேல்
25. அரவம் ஆட்டேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செய்யேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்

ககர வருக்கம்

32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப்பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கெளவை அகற்று

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்து இரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சோ¢டம் அறிந்து சேர்
52. சையெனத் தி¡¢யேல்
53. சொற் சோர்வு படேல்
54. சோம்பித் தி¡¢யேல்

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் தி¡¢
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொன்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பி¡¢யேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெற்பயிர் விளைவு செய்
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்
பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பொ¢யாரைத் துணைக் கொள்
84. பேதைமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் பு¡¢யேல்

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93. மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
95. மேன்மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்



English Rendition of Aathisoodi
by Appuu Archie
Copyright Ramalingam Shanmugalingam - 1997)

Aathisoodi

Let us glorify the Super Energy
That people of renown fantasy.


1. Learn to love virtue.
2. Control anger.
3. Don't forget Charity.
4. Don't prevent philanthropy.
5. Don't betray confidence.
6. Don't forsake motivation.
7. Don't despise learning.
8. Don't freeload.
9. Feed the hungry and then feast.
10. Emulate the great.
11. Discern the good and learn.
12. Speak no envy.
13. Don't shortchange.
14. Don't flip-flop.
15. Bend to befriend.
16. Shower regularly.
17. Sweeten your speech.
18. Judiciously space your home.
19. Befriend the best.
20. Protect your parents.
21. Don't forget gratitude.
22. Husbandry has its season.
23. Don't land-grab.
24. Desist demeaning deeds.
25. Don't play with snakes.
26. Cotton bed better for comfort.
27. Don't sugar-coat words.
28. Detest the disorderly.
29. Learn when young.
30. Cherish charity.
31. Over sleeping is obnoxious.
32. Constant anger is corrosive.
33. Saving lives superior to fasting.
34. Make wealth beneficial.
35. Distance from the wicked.
36. Keep all that are useful.
37. Don't forsake friends.
38. Abandon animosity.
39. Learn from the learned.
40. Don't hide knowledge.
41. Don't swindle.
42. Ban all illegal games.
43. Don't vilify.
44. Honor your Lands Constitution.
45. Associate with the noble.
46. Stop being paradoxical.
47. Remember to be righteous.
48. Don't hurt others feelings.
49. Don't gamble.
50. Action with perfection.
51. Seek out good friends.
52. Avoid being insulted.
53. Don't show fatigue in conversation.
54. Don't be a lazybones.
55. Be trustworthy.
56. Be kind to the unfortunate.
57. Serve the protector.
58. Don't sin.
59. Don't attract suffering.
60. Deliberate every action.
61. Don't defame the divine.
62. Live in unison with your countrymen.
63. Don't listen to the designing.
64. Don't forget your past glory.
65. Don't compete if sure of defeat.
66. Adhere to the beneficial.
67. Do nationally agreeables.
68. Don't depart from good standing.
69. Don't jump into a watery grave.
70. Don't over snack.
71. Read variety of materials.
72. Grow your own staple.
73. Exhibit good manners always.
74. Don't involve in destruction.
75. Don't dabble in sleaze.
76. Avoid unhealthy lifestyle.
77. Speak no vulgarity.
78. Keep away from the vicious.
79. Watch out for self incrimination.
80. Follow path of honor.
81. Protect your benefactor.
82. Cultivate the land and feed.
83. Seek help from the old and wise.
84. Eradicate ignorance.
85. Don't comply with idiots.
86. Protect and enhance your wealth.
87. Don't encourage war.
88. Don't vacillate.
89. Don't accomodate your enemy.
90. Don't over dramatize.
91. Don't be a glutton.
92. Don't join an unjust fight.
93. Don't agree with the stubborn.
94. Stick with your exemplary wife.
95. Listen to men of quality.
96. Dissociate from the jealous.
97. Speak with clarity.
98. Hate any desire for lust.
99. Don't self praise.
100. Don't gossip or spread rumor.
101. Long to learn.
102. Work for a peaceful life.
103. Lead exemplary life.
104. Live amicably.
105. Don't be harsh with words and deeds.
106. Don't premeditate harm.
107. Be an early-riser.
108. Never join your enemy.
109. Be impartial in judgement.

கடவுள் வாழ்த்து

ஒளவையார் (vs) Auvaiyar

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா


Milk, clear honey, caramel and lentil
I offer you the four mixed - beautiful
Teacher with Elephant face the precious gem
Teach me Sangam Tamil in its triple form.



புண்ணியமாம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.



Do good and do away with the bad as past actions
Are savings in this life - come to think
All religions preach no more but this
Harm not but do good.


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பொ¢யார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.


Castes are only two and no more to speak of
According to doctrines on Justice - In life
Givers superior non-givers inferior
So say great books about caste.


இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.


This body is a natural bag of pain
Don't believe in this unreal fed mortal body - Rush
To give the deserving if you are charitable
Before retribution catches enjoy inner peace.


எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.


Benefits for some from deeds aimed
Ineffective unless done right - Otherwise
Similar to the blind targeting a mango with his cane
Proper place and time determine aim.


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.


If unwanted it will never come even for cries
The wanted will never leave even when rejected
Don't fret constantly not knowing this
Dying in pain seems human vocation.


உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு.


Working hard confer measured comforts of life
No more no less in this life - Sea
Voyages searching for comforts immaterial
For this animate body.


எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.


Come to think of it by any standard this body
Is home for host of cruel pathogen - The wise
Knows this hence like water on lotus leaf
Their detachment is kept secret from the rest.


ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மா¢யாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தா¢யாது காணும் தனம்.


Many are the ways to get rich but working hard
Only determines the quantum - Hence
Amass Respect inhabitants of this world
Since material wealth is highly volatile.


ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.


Like when the riverbed that burns the feet if dry
Helps the world from under-water spring - Aid seekers
From people of noble birth even in hard times
Never get turned away agreeably.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்.


Wailing and wallowing at death anniversaries
Don't resurrect the dead you earthlings- Cries unwanted
We also meet the inevitable death and until our demise
Think what can we do? Feed, be fed and be merry.


ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது.


ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்ே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்க.


ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல.


பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.


சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும.


தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.


செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?


பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.


சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அ¡¢சிக்கே நாம்.


அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.


நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்.


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.


வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.


நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை.


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.


ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவா¢னும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.


உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.


மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.


தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி.


இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.


ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.


வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.


கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.


பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.


நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.


வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி.


நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.


முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் கா¡¢கையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.


தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

Thursday, January 15, 2009

Hudson River hero is ex-Air Force fighter pilot - REAL HERO


After the pilot safely landed the U.S. Airways plane into the Hudson River today, people began to quickly call him a hero.

New York Mayor Michael Bloomberg said he did a "masterful job." New York Gov. David Paterson said he averted a tragedy. But Chesley B. "Sully" Sullenberger, III, the pilot who helped save the 155 passengers and crew from the freezing waters off Manhattan was just doing his job.

Sullenberger, a 57-year-old Danville, Ca. resident, has been flying planes for over 40 years and is a former Air Force fighter pilot.

Since 1980, he has been a pilot with U.S. Airways, where he trained other pilots, helped streamline passenger service, led efforts to improve safety at airports, aided the National Transportation Safety Board in investigating accidents, and co-wrote a technical paper with NASA on crew decision-making errors.

From 1973 to 1980, he was an F-4 pilot for the Air Force. He flew missions in Europe and over the Pacific as a commander.

Sullenberger graduated with a bachelors in psychology from the U.S. Air Force Academy and went on to earn a masters in industrial psychology from Purdue University in West Lafayette, Ind. He also has a masters in public administration from the University of Northern Colorado in Greeley, Colo.

In addition to his work as a pilot, he is the president of Safety Reliability Methods, Inc., a company that provides management, safety, performance and reliability consulting to various businesses.

He is also a member of the Air Line Pilots Association, where he previously served as a safety chairman. Sullenberger was recently named a visiting scholar at the Center for Catastrophic Risk Management at the University of California, Berkeley.

by Sharon Adarlo/The-Star-Ledger,
Thursday January 15, 2009, 7:32 PM

US Airways flight 1549 crashes into Hudson River, all passengers rescued




A US Airways plane struck a flock of geese shortly after takeoff from LaGuardia Airport and crashed in the Hudson River this afternoon, though all passengers were safely rescued, authorities said.

The 155 people on the plane quickly scrambled onto the wings and inflatable rafts on the side of the partially submerged plane, which crashed minutes after the 3:26 p.m. takeoff. Ferries from both the New York and New Jersey sides of the river rushed to their aid.

"Everybody got out safely," said New York Mayor Michael Bloomberg "It would appear the pilot did a masterful job. He walked plane twice after everyone got off and I spoke with a passenger who said pilot was last one up the aisle after everyone had gotten off."

One of the passengers on the plane, Jeff Kolodajy 31, Norwalk, Conn., described hearing "a loud boom" and then, he said, "I saw fire."

"The plane just dropped about 100 feet," said Kolodajy, who was ferried to Pier 81 in New York. "It was real scary." But, Kolodajy said, "when the plane landed, the boats were there in about three or four minutes to pick us up, and the water started to fill up rapidly."

The Fire Department said 78 people were injured but the extent of the injuries wasn't immediately known.

Less than a minute after taking off from LaGuardia Airport, the pilot reported he had suffered a "double bird strike," said Doug Church, a spokesman for the National Air Traffic Controllers Union.

The controller sent the aircraft back toward LaGuardia, but the pilot saw an airport below him and asked what it was, Church said. It was nearby Teterboro Airport in New Jersey, and the pilot asked to land there, Church said.

The instruction to land at Teterboro was the last communication with the plane before it landed in the river, Church said.

The plane was submerged in the 41 degree waters near 47th Street in New York up to the windows, and rescue crews had opened the door and were pulling passengers in yellow life vests from the plane. Several boats surrounded the plane, which appeared to be slowly sinking.

"I saw what appeared to be a tail fin of a plane sticking out of the water," said Erica Schietinger, whose office windows at Chelsea Piers look out over the Hudson. "All the boats have sort of circled the area. ... I can't tell what's what at this point."

In Manhattan, rescue workers were slowly bringing survivors out of the NY Waterways ferry terminal at around 5 p.m. At least three, including a woman in her 40s bundled against the cold, were brought out on stretchers wearing oxygen masks and placed in waiting ambulances.

Dr. Gabriel Wilson, emergency director at Roosevelt Hospital in Manhattan, said a husband and wife had been treated for hypothermia and were in good condition. A flight attendant being examined for a possible fracture was in stable condition. As he spoke, other patients were being brought in on gurneys wrapped in blankets.

"I was told they were in waist-deep water and they slid into the rafts," Wilson said, adding that it was unlikely any of the patients would be at the hospital long. "They're a little shaken up."

The flight was US Airways flight 1549, which took off at 3:26 p.m., headed for Charlotte, N.C.

The NY Waterways ferry terminal at Port Imperial in Weehawken is closed until further notice, company officials said. Commuters who take the New Jersey-bound ferry will have to find another way home.

Christian Martin, who witnessed the crash from a New York office building, said the response by emergency personnel was swift after the plane hit the water.

"It came down very smoothly. If it had been an airport runway it looked just like that," Martin said. "It's drifted down the river. Touched down about 56th street. It's way further down now."

Ferry boats raced to help from both sides of the river, Martin said.

"In about four minutes, there was a ferry there and you could see people on the wings," Martin said. "I didn't exactly see people exiting because the ferry boat was in the way. There seemed to be plenty of time for people to get off the wings. Within 10 minutes there were three or four ferryboats, from the New Jersey and the New York side."

Kolodajy said the passengers around him on the plane seemed to be uninjured.

"Everyone's fine. There was a lady with her baby and she was trying to crawl over the seats. And I said, women and children first. She got off," said Kolodajy, who praised the effort by the pilot.

"I tell you what. It says a lot about people. He knew we were going down," Kolodajy said. "The engine blew out about three minutes, we circled around to the Hudson. Pilot said, look, we're going down. We looked at one another and said prayers."

Giulio Farnese, 59, and his coworker at New York Waterways, 39-year-old Natale Binetti, were at the ferry dock in Weehawken when they were alerted to the plane crash by two construction workers.

They immediately took off to rescue people in a boat. It took them roughly 10 minutes to reach the plane, where they rescued 14 people who were standing on a wing, many of them screaming or bleeding from the face.

"They were completely shocked," said Binetti, who lives in Hoboken. "They were crying, and they were soaking wet. They were scared."

When James Mohr, 21, opened the door of his apartment at around 3:45 p.m. in the Bronx, he heard a loud boom.

"It boomed more than once," Mohr said. "I saw fire spitting out of one of the engines. I want to say the right one, but I could be wrong."

The A320 is a widely used, medium-range passenger jet used around the world. More than 1,900 A320s are in service with 155 airlines.

The twin-engine jet, equipped with a "fly-by-wire" control system when it entered service in 1988. It typically can seat 150 passengers in a two-class cabin layout, and has a range of 3,000 nautical miles.

During its 20-year history there have been eight fatal Airbus crashes , the worst accident in 2007 when all 186 passengers and crew and 12 people on the ground died when a Tam Airlines jet ran off the runway at Sao Paulo- Congonhas Airport in Brazil.

Last year, a United Airbus A320 flying out of Newark Liberty International Airport experienced multiple avionics and electrical failures, including loss of all communications, shortly after taking off. The flight returned safety for a landing with no injuries to the 107 passengers and crew aboard the airplane and no damage to the jet.

A US Airways spokesman in a news conference shortly after 5 p.m. said it would be "premature to speculate about the causes of this accident."

The National Transportation Safety Board is sending a 20-member team to investigate the crash. The team will be arriving in New York tonight.

---------by The Star-Ledger Continuous News Desk Thursday January 15, 2009, 5:32 PM

மாட்டுப்பொங்கல் இடுவது ஏன்?


வாயில்லா ஜீவன்களில் மனித சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து நிற்பது பசு என்றால் அது மிகையில்லை. காலையில் எழுந்ததும் "பால் வந்து விட்டதா?' என்பது தான் நம் முதல் கேள்வியாக இருக்கிறது. அன்போடு வாஞ்சையாக ""அம்மா'' என்று பசு அழைக்கிறது. ஆனால், உண்மையில் நம் எல்லோருக்கும் பசுவே தாயாக இருந்து பால் தந்து காக்கிறது. பெற்ற தாய் கூட இரண்டு வயது வரை தான் பால் தருவாள். ஆனால், எத்தனை வயதானாலும் பசுவின் பால், மோர், தயிர், நெய் நம் உணவில் சேர்த்துக் கொள்ள மறப்பதில்லை.

வயதாகி சாப்பிட முடியாத நிலை வரும் போது, பசும்பால் மட்டுமே நமக்கு கைகொடுக்கிறது. உயிர் வெளியேறத் துடிக்கும் போது, குழந்தைகளெல்லாம் வாயில் பால் ஊற்றுகிறார்கள். இறந்த பிறகு சமாதியிலும் பால் ஊற்றுகிறார்கள். இப்படி பிறப்பு முதல் இறப்புக்குப் பிறகும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாயான பசுவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கத்திலேயே மாட்டுப்பொங்கல் இடப்படுகிறது. அதனால் தான் அதனை ""கோமாதா'' என்று அழைக்கிறோம்.



பசுவுக்காக வாழ்ந்த சித்தர்: திருவாவடுதுறைக்குத் தெற்கே உள்ள சாத்தனூர் என்னும் ஊரில் மூலன் என்னும் இடையன் வாழ்ந்து வந்தான். தான் வளர்த்து வந்த பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தான். பசுக்களும் மூலன் மீது தன் அன்பைப் பொழிந்தன. ஒருநாள் காட்டில் மேய்ச்சலுக்கு சென்றபோது, ஒரு பாம்பு மூலனைத் தீண்டியது. அவன் இறந்து விட்டான். மூலனை விட்டுப் பிரிய மனமில்லாத பசுக்களின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கதறி நின்றன. வான் வழியே சென்று கொண்டிருந்த சிவயோகியான சித்தர் ஒருவர் இக்காட்சியைக் கண்டு பசுக்கள் மீது இரக்கம் கொண்டார். பசுக்களின் கண்ணீரைத் துடைக்க எண்ணம் கொண்டார். "பரகாயப்பிரவேசம்' என்னும் கூடுவிட்டுக் கூடுபாயும் முறையில் மூலனின் உடம்பில் புகுந்தார். அதுவரை மூலனாக இருந்த அந்த உடல், சித்தரின் புனித சேர்க்கையால் ""திருமூலர்' என்ற பெயர் பெற்றது. அவர் புகழ் பெற்ற சித்தர் ஆனார். தன் மீது அன்புகாட்டிய மூலன் உயிர்த்தெழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ச்சியில் திளைத்தன. காலையிலிருந்து பசும்புல் உண்ணாமல் வாடி நின்ற பசுக்கூட்டங்களை திருமூலர் நீர் அருந்தச் செய்து, வயிறார மேயச் செய்து ஊர்போய் சேர்ந்தார். இவர் எழுதிய பாடல்கள் "திருமந்திரம்' என்று போற்றப்படுகிறது.

பசுக்குலத்திற்கே பெருமை: அப்பர் தேவாரத்தில் "ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்' என்று பாடுகிறார். "ஆ' என்றால் பசு; "அஞ்சாடுதல்' என்றால் "பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்தல்'. பஞ்சகவ்யம் என்பது பசுவிடமிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம்(பசுவின் ஜலம்), கோமயம்(பசுஞ்சாணம்) என்னும் ஐந்து பொருள்களும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்ந்த கலவையே பஞ்சகவ்யம் எனப்படும். இதுதவிர, பாலபிஷேகம், தயிர் அபிஷேகம், நெய்யபிஷேகம் என்று தனித்தனியாகவும் சிவபெருமானுக்குச் செய்வதும் உண்டு. திருவையாறு அருகிலுள்ள தில்லைஸ்தானம் என்னும் தலத்தில் இருக்கும் பெருமானுக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகும். தில்லைஸ்தானம் என்னும் இத்தலம் தேவாரத்தில் திருநெய்த்தானம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பஞ்சகவ்யத்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது பசுக்குலத்திற்கே பெருமை என்று அப்பர் குறிப்பிடுகிறார். பால் அபிஷேகத்தை "கோசிருங்கம்' எனப்படும் பசுக்கொம்பினால் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

சாத்வீக உணவு: சாதுவான பிராணியான பசுவினைத் தெய்வமாகக் கருதி வழிபாடு செய்கிறோம். பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல் மனிதசமுதாயத்திற்கு மகத்தான உணவுப்பொருளாகப் பாலைத் தருகிறது. உணவு வகையில் சாத்வீகம் (சாந்தம்), ராட்சசம்(மிருகம்), தாம்சம் (மந்தம்) என்று முக்குணங்களை ஏற்படுத்தும் பொருள்கள் உண்டு. இதில் பசுவின் பால் சாத்வீக உணவாகும். பால் பசுவின் ரத்தம் என்பதால் அதுவும் அசைவம் தானே என்ற அபிப்ராயம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சாஸ்திரத்தில் பசும்பால் சாத்வீக உணவு என்றே குறிக்கப்பட்டுள்ளது. பாலைக் கொடுப்பதால் பசுவிற்கு ஹிம்சை எதுவும் இல்லை. அது நம் அறிவை துலங்கச் செய்கிறது. பல சாதுக்கள், பசும்பாலை ஆகாரமாகக் கொண்டு உதாரணமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். முக்குண உணவுகளைப் பற்றி விவரிக்கும் கீதையை போதித்த கிருஷ்ணர், ஆயர்பாடியில் பாலையும், வெண்ணெயையும் திருடிச் சாப்பிட்ட நவநீதகிருஷ்ணனாக இருந்திருக்கிறார்.

வெள்ளையைத் தேடி கருப்பு வரும்: நம் மனம் எல்லாம் வெள்ளை வெளேரென்று பாலினைப் போன்று இருக்கவேண்டும். அப்போது தான் கன்னங்கரேல் என்று இருக்கின்ற கிருஷ்ணன் நம்மை நாடி வருவான். "கார்வண்ணன்' என்றால் "மேகம் போன்று கருமையாக இருப்பவன்' என்று பொருள். எவ்வளவு கருமையாக மேகம் வானில் கூடுகிறதோ அதற்கு தகுந்தாற்போல மழை கொட்டும். அதுபோல, கண்ணன் நம் மீது அருள்மழை கொட்டுபவன். அவன் அப்படியே பசும்பாலை எடுத்துக் குடிப்பதில்லை. அது தயிராகி, அதிலிருந்து வெண்ணெய் எடுத்தால் அதை உண்ண விரைந்து வருவான். இதற்கு காரணம் என்ன தெரியுமா? வெள்ளை மனம் என்னும் பாலை, பக்தி என்னும் நெருப்பு கொண்டு காய்ச்சினால் அது பொங்கும். நெருப்பை அணைத்ததும் பொங்கிய பால் தணிவது போல, மனதின் உணர்ச்சி வேகத்தை அடக்கி, அதில் சாந்தம் என்னும் உறை ஊற்றினால், மனம் தயிர் போல கெட்டியாகி விடும். தயிரை மத்தினால் கடைந்தால் வெண்ணெய் ஊற்றெடுப்பது போல, கெட்டியான மனம் என்னும் தயிரை "கடவுளைப் பற்றிய ஒருமுகசிந்தனை' என்ற மத்தால் கடைந்தால் "பூரணத்துவம்' (மனிதனாகப் பிறந்ததே கடவுளை நிரந்தரமாக அடைவது என்ற நோக்கம்) என்ற வெண்ணெய் கிடைக்கும். நம் மனதுக்குள் கிடக்கும் பூரணத்துவம் ஆகிய வெண்ணெயை திருட கருமை நிறமுடைய கண்ணன் வருவான். அவனது அருள் கிடைத்ததும் நாம் அவனுடன் இரண்டற கலந்து விடுவோம்

நடமாடும் கோயில்: பசு இருக்கும் இடம் புனிதமானது. அதை நடமாடும் கோயில் எனலாம். பூஜையறையில் செய்யும் வழிபாட்டை விட, மாட்டுக்கொட்டிலைத் தினமும் சுத்தம் செய்து, அங்கு அமர்ந்து ஜபம் செய்யும் வழிபாட்டிற்கு கோடி மடங்கு பலனும், புண்ணியமும் கிடைக்கும். பசுவின் உடலில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் உள்ளனர். சகல புண்ணிய நதிகளும் அதன் உடம்பில் அடங்கியுள்ளனர். அதனால் பசுவே ஒரு நடமாடும் ஆலயம் போன்றதாகும். அங்கு செய்யப்படும் பிரார்த்தனை எல்லா தேவர்களையும் சென்றடையும். லட்சுமி வாசம் செய்யும் தலங்களான சுமங்கலியின் வகிடு, மலர்ந்த தாமரை, யானையின் தலை, வில்வதளம், பசுவின் பிருஷ்டபாகம்(பின்புறம்) ஆகிய ஐந்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காலை வேளையில் பசுக்கள் கிளப்பும் தூசி பட்ட காற்று மிகவும் உன்னதமானது. அதனால் அந்த பிரம்மமுகூர்த்த வேளையான அதிகாலைப் பொழுதை ""கோதூளி லக்னம்'' என்று குறிப்பிடுவர். தினபூஜைகள் நடத்தும் போது முதலில் பசுவிற்கு கோபூஜை செய்த பின்பே கஜபூஜை, சிவபூஜைகளைச் செய்ய வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது.

பசுக்களைப் பாதுகாப்போம்: பசுக்களைப் பாதுகாத்தால் நாட்டில் நன்மை உண்டாகும். பாவங்கள் விலகும். அமைதி பெருகும். உலகில் தர்மம் தழைக்க வேண்டுமானால் பசுக்களைப் பாதுகாப்பது அவசியம். தர்மதேவதையே தவம், தூய்மை, தயை, சத்தியம் என்னும் நான்கு கால்களைக் கொண்ட காளை வடிவில் தான் இருக்கிறது. கலிதோஷம் நீங்கி தர்மம் மீண்டும் உலகில் தலையெடுக்க வேண்டுமானால், கோபால கிருஷ்ணனை வழிபாடு செய்து, பசுக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் எல்லா தர்மங்களையும் தர்மருக்கு உபதேசிக்கும்போது, பசுவின் மகிமைகளைச் சொல்லி, அவற்றைப் பாதுகாக்கும்படி எடுத்துக் கூறுகிறார். பசுவைத் தானமாகக் கொடுப்பது மிகுந்த புண்ணியபலனைத் தருவதாகும். மாபாதகங்கள் தீர்க்கும் மாமருந்து என்றே இதைச் சொல்லலாம். ஆனால், தானம் பெறுபவர் அந்தப் பசுவை இறுதி வரை பாதுகாப்பவரா என்பதை உறுதி செய்தபின் தானம் செய்வது நல்லது. சியவன மகரிஷி பசுக் களைப் பற்றி,""எந்ததேசத்தில் பசுக்கள் தங்களுக்கு இம்சை நேருமோ என்று பயப்படாமல், கோகுலத்தில் நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின் றனவோ அந்த தேசமே எல்லாப் பாவங்களில் இருந்து விலகி ஒளியுடையதாய் பிரகாசிக்கும்,'' என்று குறிப்பிடுகிறார்.

Wednesday, January 14, 2009

பகைவனுக்கு அருள்வாய் ! ! !

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோ மே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்.

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே!

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே!

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே!

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!

நித்தம் விதிதொடர்ந் திடுமோ?????? - உலகத்தை நோக்கி வினவுதல்

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே, கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? - வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
[போனதனால் நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர்
[விதையிலென்றால், சோலை பொய்யாமோ? - இதைச் சொல்லொடு
சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
(காண்ப மென்றோ? வீண்படு பொய்யிலே - நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

மனதிலுறுதி வேண்டும்,

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

அச்சமில்லை !!!!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

நெஞ்சு பொறுக்குதில்லையே !!!!!!!!!!


நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?

அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்

சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே
கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்
சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர்

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

Great Indian Ocean Earthquake Of 2004 Set Off Tremors In San Andreas Fault


ScienceDaily (Dec. 24, 2008) — In the last few years there has been a growing number of documented cases in which large earthquakes set off unfelt tremors in earthquake faults hundreds, sometimes even thousands, of miles away.

New research shows that the great Indian Ocean earthquake that struck off the Indonesian island of Sumatra on the day after Christmas in 2004 set off such tremors nearly 9,000 miles away in the San Andreas fault at Parkfield, Calif.

"We found that an earthquake that happened halfway around the world could trigger a seismic signal in the San Andreas fault. It is a low-stress event and a new kind of seismic phenomenon," said Abhijit Ghosh, a University of Washington doctoral student in Earth and space sciences.

"Previous research has shown that this phenomenon, called non-volcanic tremor, was produced in the San Andreas fault in 2002 by the Denali earthquake in Alaska, but seeing this new evidence of tremor triggered by an event as distant as the Sumatra earthquake is really exciting," he said.

Ghosh is to present the findings Dec. 17 in a poster at the American Geophysical Union annual meeting in San Francisco.

The Indian Ocean earthquake on Dec. 26, 2004, was measured at magnitude 9.2 and generated tsunami waves that killed a quarter-million people. It was not known, however, that an earthquake of even that magnitude could set off non-volcanic tremor so far away.

The San Andreas fault in the Parkfield region is one of the most studied seismic areas in the world. It experiences an earthquake of magnitude 6.0 on an average of every 22 years, so a variety of instruments have been deployed to record the seismic activity.

In this case, the scientists examined data from instruments placed in holes bored in the ground as part of the High-Resolution Seismic Network operated by the University of California, Berkeley, as well as information gathered by the Northern California Seismic Network operated by the U.S. Geological Survey.

Signals corresponding with non-volcanic tremor at precisely the time that seismic waves from the Indian Ocean earthquake were passing the Parkfield area were recorded on a number of instruments as far as 125 miles apart.

"It's fairly obvious. There's no question of this tremor being triggered by the seismic waves from Sumatra," Ghosh said.

Scientists have pondered whether non-volcanic tremor is related to actual slippage within an earthquake fault or is caused by the flow of fluids below the Earth's surface. Recent research supports the idea that tremor is caused by fault slippage.

"If the fault is slipping from tremor in one place, it means stress is building up elsewhere on the fault, and that could bring the other area a little closer to a big earthquake," Ghosh said.

Monitoring tremor could help to estimate how much stress has built up within a particular fault.

"If the fault is closer to failure, then even a small amount of added stress likely can produce tremor," he said. "If the fault is already at low stress, then even high-energy waves probably won't produce tremor."

The work adds to the understanding of non-volcanic tremor and what role it might play in releasing or shifting stress within an earthquake-producing fault.

"Our single-biggest finding is that very small stress can trigger tremor," Ghosh said. "Finding tremor can help to track evolution of stress in the fault over space and time, and therefore could have significant implications in seismic hazard analysis."

Co-authors of the poster are John Vidale, Kenneth Creager and Heidi Houston of the UW and Zhigang Peng of the Georgia Institute of Technology. Funding for the work came from the National Science Foundation.

Great Lakes Water Levels Sensitive To Climate Change



ScienceDaily (Jan. 14, 2009) — The water level in the Great Lakes has varied by only about two meters during the last century, helping them to play a vital role in the region's shipping, fishing, recreation and power generation industries.

But new evidence by scientists from the University of Rhode Island and colleagues in the U.S. and Canada, published recently in the journal Eos, indicates that the water level in the lake system is highly sensitive to climate changes.

"In the distant past, there were great fluctuations in the water level of the Great Lakes, but it was thought to have been related entirely to the advance and retreat of the glaciers," said URI geological oceanographer John King, who led the study with URI visiting scientist Michael Lewis, emeritus scientist with the Geological Survey of Canada. "But the last time lake levels fell dramatically – down to 20 meters below the basin overflow outlets – it was due to dry climate conditions."

That event, which occurred between 7900 and 7500 years ago in the early Holocene period, caused the lakes to become disconnected as their overflow rivers, including the Niagara River, ran dry.

"People used to say that the oceans are so big, we can dump whatever we want in them and nothing will happen," said King. "They thought of the Great Lakes in the same way, that the system is too large to be sensitive to climate variations. But now we know that to be untrue. We've demonstrated that at least once in the last 10,000 years, climate drove the lake levels down pretty substantially."

Researchers had long assumed that the Great Lakes had been "hydrologically open" and connected since their formation 16,000 years ago during the retreat of the last ice sheet, but recent evidence has found this to be false. Ancient shorelines, submerged beaches, and tree stumps on the floor of some lakes indicate that the water line had been as much as 20 meters below the present lake level.

"We had a multi-proxy approach to this study, and through many lines of evidence we identified this as a dry interval with a climactic cause as opposed to a glacial-related cause," King said.

The climate and water levels in the Great Lakes region are determined by the interplay of three air masses: dry, cold Arctic air from the North, dry warm Pacific air from the West, and warm, moist tropical air from the Gulf of Mexico. The scientists found that during the period when lake levels receded significantly, the dry air from the Arctic and Pacific was dominant. Later, when precipitation from the tropical air mass became more frequent, the Great Lakes began to flow from one to another as they do today.

King worries about the economic impact to the Great Lakes region if the present climate changes lower water levels significantly. Navigation, water usage and hydropower would be severely affected.

"The climate interval that occurred back then is different from what we're going through now," King said. "It would take a pretty big change to close the basins again. But the sorts of temperatures and precipitation amounts that happened then are within the range of what is predicted for 2100. In the worst-case scenarios, a lot of things become possible.

"The range of lake-level changes that are likely to happen in the next 100 years is probably larger than the range of levels observed during the last century," he added.

தஞ்சாவூர் - புன்னைநல்லூர் மாரியம்மன்

தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூரில் புற்றுவடிவில் மாரியம்மன் அருள்பாலித்து வருகிறாள். தல வரலாறு: சோழமன்னர்கள் தங்களது வெற்றி தெய்வமாக காளியை வழிபட்டு வந்தார்கள். இவர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டு திசைகளிலும், அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தார்கள். இதில், கிழக்கு பக்கம் அமைக்கப்பட்ட சக்தியே "புன்னைநல்லூர் மாரியம்மன்' என சோழசம்பு நூல் கூறுகிறது.

1680ல் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா திருத்தல யாத்திரை செய்யும் போது, சமயபுரத்தில் தங்கினார். அன்றிரவு அம்பிகை அரசரின் கனவில் தோன்றி, ஒரு புன்னைக் காட்டில் புற்றுவடிவில் தான் இருப்பதாகவும், தன்னை வழிபடும்படியும் கூறி மறைந்தாள். அரசரும், அவள் குறிப்பிட்ட இடம் வந்து புற்றுவடிவில் இருந்த அம்மனைக் கண்டு, மேற்கூரையும் அமைத்தார். அத்துடன் இத்தலத்திற்கு "புன்னைநல்லூர்' என பெயரிட்டு, அந்த கிராமம் முழுவதையும் கோயிலுக்கு தானமாக வழங்கினார்.

பார்வை தந்த பார்வதி: துளஜா என்ற ராஜாவின் புதல்விக்கு அம்மை நோய் ஏற்பட்டு பார்வை போனது. அம்மன் பக்தரான இவரது கனவில், குழந்தை வடிவில் தோன்றிய அம்பிகை, புன்னைநல்லூர் வந்து வழிபடும்படி கூறி மறைந்தாள். மன்னரும் அதன்படி செய்தார். மகளுக்கு பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ந்த மன்னர், மேற்கூரையை மாற்றி விட்டு, பெரிய அளவிலான கோயில் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார்.

கோயில் திருப்பணி: சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது. மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்கள். சதாசிவ பிரம்மேந்திர சுவாமி புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவத்தைக் கொடுத்து, ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்தார்.

அபிஷேக முறை: மூலவர் புற்று மண்ணால் ஆனதால், அபிஷேகம் கிடையாது. அதற்குப் பதிலாக தைலக்காப்பு சாத்தப்படுகிறது. மூலவர் அருகிலுள்ள விஷ்ணு துர்க்கைக்கும், உற்சவ அம்மனுக்கும் அபிஷேகம் உண்டு. ஐந்து வருடத் திற்கு ஒருமுறை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அம்பாளுக்கு தைலக்காப்பு செய்யப்படும். அப்போது, அம்மனை ஒரு வெண்திரையில் வரைந்து அதில் ஆவாஹனம் செய்து, ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) பூஜை செய்யப்படுகிறது. தைலக்காப்பில் இருக்கும் காலத்தில் உஷ்ணத்தால் பாதிக்காமல் இருக்க இளநீர், தயிர் நைவேத்யம் செய்யப்படுகிறது. அத்துடன் மூலஸ்தானத்தை சுற்றி அமைக்கப் பட்டுள்ள உள்தொட்டி, வெளித்தொட்டி இரண்டிலும் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகிறது. கோடையில் அம்மனின் முகத்திலும், தலையிலும் முத்து முத்தாக வியர்வை தோன்றி மறைவதை இப்போதும் காண முடிவது கலியுக அதிசயம். இதனால் இவளை "முத்து மாரியம்மன்' என்றும் சொல்வர்.

பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்தது.

பிரார்த்தனை: அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மூலஸ்தானத்தில் உள்ள உள் தொட்டி, வெளிதொட்டிகளில் நீர் நிரப்பி அம்மனை வழிபாடு செய்கின்றனர். கட்டி, பரு உள்ளவர்கள் இங்குள்ள வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கி போடுகிறார்கள். குளத்தில் வெல்லம் கரைவது போல இவை கரைந்து விடும் என்பது நம்பிக்கை. கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வியாபார செழிப்பு வேண்டுபவர்கள் ஆவணி ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபடுகிறார்கள்.

திருவிழா: ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, நவராத்திரி.

திறக்கும் நேரம்: காலை 5- இரவு 9 மணி. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 3- இரவு 11 மணி.

இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் ரோட்டில் ஆறு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. பழைய, புதிய பஸ்ஸ்டாண்ட்களில் இருந்து பஸ்கள் உள்ளன.

திருவையாறும் தியாகராஜ சுவாமிகளும்

இன்று உலக அளவில் கர்நாடக சங்கீதம் எங்கும் பரவி உள்ளது என்றால், அதற்கு திருவையாறும் அங்கு வாழ்ந்த தியாகராஜ சுவாமிகளும் தான் என கூறினால் மிகையாகாது.

இவர் 1767ல் திருவாரூரில் ராமபிர்மம் என்பவர்களுக்கு குழந்தையாக பிறந்தார். அவ்வூர் இறைவன் பெயரையே தியாகராஜர் என குழந்தைக்கு வைத்தனர் பெற்றோர். இவர் ராமபிரானையே தன் பாடல்களில் அமைத்து இயற்றினார். தினமும் தனியாகவோ, சீடர்களுடனோ வீதிவீதியாக செல்லும் இவர், 'உஞ்ச விருத்தி' என்ற முறையில் ராம நாம பாடல்களை பாடி அதில் கிடைக்கும் உணவுப்பொருள்களை சமைத்து ராமருக்கு நைவேத்தியம் செய்து பின் தான் உண்பார். சதா சர்வ காலமும் ராம சிந்தனையில் வாழ்ந்த இவர் தன் வாழ்நாளில் 96 கோடி முறை ராம நாம மந்திரத்தை உச்சரித்த மகா புருஷர். இவரது 38வது வயதில் ராமர் இவருக்கு தரிசனம் தந்தார்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்


கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது என்பார்கள். இதற்கு விஞ்ஞான ரீதியாகவும் காரணம் உண்டு. அக்காலத்தில் இடி,மின்னல் ஏற்பட்டால் அதை தாங்குவதற்கு எந்த வித வசதியும் இல்லை. கோயில்களில் வைக்கப்படும் கொடிமரத்தை தேக்கு மரத்தால் செய்து அதன் மேல் தாமிர தகடு வைத்து மூடியிருப்பார்கள். இதில் இடியோ மின்னலோ பட்டால் அது அப்படியே பூமிக்குள் ஈர்க்கப்பட்டு விடும். அத்துடன் கொடிமரத்தின் கீழ் நேர்த்திக்கடனுக்காக உப்பு கொட்டுவார்கள். இதனால் அந்த கொடிமரத்தின் ஈர்ப்பு சக்தி அதிகமாகும். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடி,மின்னலினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் கோயிலோ,கொடிமரமோ இல்லாவிட்டால் இதன் பாதிப்பு அப்படியே மக்களைப்பாதிக்கும்.மேலும் கொடிமரத்திற்கு பூஜை செய்யச்செய்ய அதன் எதிரே கற்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு சென்று மூலவரின் சக்தியை அதிகரிக்கச் செய்து, பின் கொடிமரத்தின் கீழ் வணங்கும் மக்களுக்கு அதன் பலன் சென்றடைகிறது.

கோயில்களில் கட்டப்படும் ராஜகோபுரங்களில் எல்லாம் நடுவில் வாசல் போன்று காற்று செல்ல வழி ஏற்படுத்திஇருப்பார்கள். ஏனென்றால் வேகமாக வீசும் காற்றால் கோபுரம் சாய்ந்து விடாமல், அந்த பாதை வழியே காற்று வெளியேறிவிடும். இதனால் கோபுரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
-எம்.கண்ணன்,மதுரை

தஞ்சாவூர் "ரகசியம்"


சிதம்பரம் நடராஜர் கோயிலில் "ஆகாய ரகசியம்' போல, தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் ஆகாயம் ரகசியமாக இருக்கிறது. இக்கோயிலின் மூலஸ்தான விமானம், கோபுரம் போல மிக உயரமாக கட்டப்பட்டிருக்கிறது. சிவலிங்கத்திற்கு மேலே, விமானத்தின் உச்சிப்பகுதி வரையில் வெற்றிடமாகவே இருக்கிறது. சிவன், அரூப (உருவமற்ற) வடிவில் காட்சியளிப்பதை உணர்த்தும்விதமாக இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்த விமானம் "தட்சிணமேரு விமானம்' என்று அழைக்கப்படுகிறது.

Tuesday, January 13, 2009

பேசுவதால் பயனேதும் இல்லை

  • வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்காக பயிர்களை திருப்பித்தரும். அதைப்போலவே ஒருவர் செய்யும் நன்மையும், தீமையும் பல மடங்காக பெருகி அவரிடமே வந்து சேரும். ஆகவே, எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.
  • சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதியாகவே இருங்கள்.
  • நெருப்பு எரியும் இடத்தில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருக்கும். நெருப்பினால் நமக்கு தேவையானவற்றை சூடுபடுத்திக் கொள்ளாலாம் அல்லது பிற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், புகையால் பயன் ஏதும் இல்லை. புகையை நிறுத்த வேண்டுமானால் நெருப்பை அணைக்க வேண்டும். நெருப்பு என்ற பற்றினை அணைத்து விட்டால், புகை என்ற காரியமானது தாமாகவே அழிந்து விடுகிறது.
  • ஆசை அழிக்கும் குணமுடையது. அன்பு வளர்க்கும் குணத்தை உடையது. நீங்கள் வளர்க்கும் குணமுடையவர்களாக இருங்கள். வீணான ஆசைகளால் துன்பம் நேருமே தவிர நன்மை எதுவும் உண்டாகிவிடாது என்பதால் ஆசையை அழித்து விடுங்கள்.

THE STORY OF INDIA

PBS and the BBC team up for a landmark series on the world's largest democracy and rising economic giant. Don't miss the first history of India on western television.
http://www.pbs.org/thestoryofindia/

Monday, January 12, 2009

அச்சமில்லை! அச்சமில்லை!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 1

கச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

Sunday, January 11, 2009

Tamil Daily Calender 2009

Very interesting to see the calender online...
http://tamilcalender.hosuronline.com/

"Bahavath Geethai"

Do you want to listen Bhagavath Geethai...

Bhagavad-gita chanting has wonderful atmosphere. Even low quality mp3(pro) files don't decrease the potency of ancient mantras of the Lord. Try to listen at least to one of them, follow the translation and maybe you will be inspired to chant daily...

Please follow this link......
http://www.vaisnava.cz/clanek_en.php3?no=24

நமக்கு வேண்டிய நான்கு

எல்லா தெய்வ வழிபாடும் ஒன்று தான். அறம், பொருள், இன்பம் இம் மூன்றிலும் தெய்வஒளியைக் காண்பவன் நான்காம் நிலையாகிய வீடுபேறு(முக்தி) அடைய தகுதியுடையவன் ஆவான்.
1. சுயநலத்தை மறந்து விடு.
2. தெய்வத்தை முழுமையாக நம்பு.
3. உண்மையையே எப்போதும் பேசு.
4. நியாயத்திற்கு கட்டுப்பட்டு உன் செயல்களைச் செய்.
அப்படி செய்தால் எல்லா இன்பங்களையும் நீ பெற்று மகிழ்வாய்.
அறிவே தெய்வம். அறிவு இருக்கும் இடத்தில் ஆண்டவனின் அருளாட்சி நடக்கிறது. அந்த அறிவாகிய கடலில் நாம் ஒவ்வொருவருமே ஒரு திவலை போல இருக்கிறோம். நமக்கு இந்த உலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயின்மை, அறிவு, செல்வம். இந்நான்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையானவையாகும். இவற்றை அருளும்படி தெய்வத்திடம் மன்றாடிக் கேட்க வேண்டும்.பொய் சொல்லக்கூடாது. புறம் சொல்லித் திரியக் கூடாது. முகஸ்துதியாக புகழுரை கூடாது. தன்னைத் தானே புகழ்ந்து பேசக்கூடாது. இந்நான்கையும் தவிர்த்து உள்ளதை உள்ளவாறு மட்டுமே பேச வேண்டும்.சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தியைத் தியானம் செய்து சித்தம் சக்தி மயமானால் அதன் பின் எல்லாம் இன்பமயமாகிவிடும்.
- பாரதியார்

மனதின் வெளிப்பாடே உலகம் - விவேகானந்தர்


  • கடவுள் வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவை அளக்க முடியாது. ஆனால், வட்டத்தின் மையம் எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது. மனிதன் வட்டத்தின் மையம் போன்றவன். கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு இதுதான்.
  • துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.
  • அறியாமை மிக்க வாழ்க்கையானது உயிரற்ற ஜட வாழ்க்கையைப் போன்றது. அறியாமையில் உழல்வதைவிட மரணமே மேலானது.
  • தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, ஒரு முயற்சியை மேற்கொண்டு அதனால் மாள்வதே மேல்.
  • இரும்பின் மேல் சம்மட்டி அடிக்கும் ஒவ்வொரு அடியும் அதன் உருவத்தை தீர்மானம் செய்வது போல, நாம் எண்ணும் எண்ணங்கள் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. வார்த்தைகள் அவ்வளவு முக்கியம் அல்ல. எண்ணங்களே அதிக ஆற்றல் வாய்ந்தவை.
  • உலகை அழகு பொருந்தியதாக்குவதும், அவலட்சணமாக்குவதும் நம் எண்ணங்களே. இந்த உலகம் முழுவதும் நம் மனத்தின் வெளிப்பாடுகளே. இந்த உண்மையை புரிந்து கொண்டாலே, சரியான வாழ்க்கை வாழ முடியும்.

மனப்புயலை அடக்கிவிடு

  • தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.
  • சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்.
  • எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.
  • ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.
  • வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.
  • சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா துவங்கியது

தஞ்சாவூர்: திருவையாறில் ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகள் 162வது ஆராதனை விழா துவங்கியது. துவக்க விழாவில் ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபா செயலர் அரித்துவாரமங்கலம் பழனிவேல் வரவேற்றார். தலைவர் ரெங்கசாமி மூப்பனார் தலைமை வகித்து பேசுகையில், ""30 ஆண்டுகளாக இந்த சபாவின் செயலராக இருந்த குன்னக்குடி வைத்தியநாதன் நம்மிடம் இல்லாதது பெரிய இழப்பாகும். சபாவின் திருமண மண்டபம், பல கட்டடங்கள் அவரால் கட்டப்பட்டது. அவர் மறைவு சங்கீத உலகுக்கும், சபாவுக்கு பெரிய இழப்பாகும்,'' என்றார். வயலின் வித்வான் சந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: நான் சிறு வயதில் 1951லும், 1964 முதலும் இங்கு நடக்கும் விழாவுக்கு வந்து செல்வதை பாக்கியமாக கருதுகிறேன்.

Saturday, January 10, 2009

தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
( குறள் எண் : 314 )
மு.வ : இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

Thirukkural in English

It is interesting to read online with English translation............................
http://kural.muthu.org/

Thirukkural


"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை,
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்,
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

valluvan.gif (2817 bytes)

- Subramaniya Bharathy