Sunday, January 11, 2009

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா துவங்கியது

தஞ்சாவூர்: திருவையாறில் ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகள் 162வது ஆராதனை விழா துவங்கியது. துவக்க விழாவில் ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபா செயலர் அரித்துவாரமங்கலம் பழனிவேல் வரவேற்றார். தலைவர் ரெங்கசாமி மூப்பனார் தலைமை வகித்து பேசுகையில், ""30 ஆண்டுகளாக இந்த சபாவின் செயலராக இருந்த குன்னக்குடி வைத்தியநாதன் நம்மிடம் இல்லாதது பெரிய இழப்பாகும். சபாவின் திருமண மண்டபம், பல கட்டடங்கள் அவரால் கட்டப்பட்டது. அவர் மறைவு சங்கீத உலகுக்கும், சபாவுக்கு பெரிய இழப்பாகும்,'' என்றார். வயலின் வித்வான் சந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: நான் சிறு வயதில் 1951லும், 1964 முதலும் இங்கு நடக்கும் விழாவுக்கு வந்து செல்வதை பாக்கியமாக கருதுகிறேன்.

No comments:

Post a Comment