Friday, January 23, 2009

Good Thoughts - About Life


These good thoughts
were collected by Bob Hansen, formerly executive director of the Korean War Veterans Advisory Board and now executive director of the U.S. Botanical Garden National Fund. This previously appeared in Airborne Quarterly. There is something here for every one of us.


The most destructive habit Worry
The greatest joy Giving
The most endangered species Dedicated leaders
Our greatest natural resource Our youth
The greatest “shot in the arm” Encouragement
The greatest problem to overcome Fear
The most effective sleeping pill Peace of mind
The most crippling disease Excuses
The most powerful force in life Love
The most destructive pariah Gossip
The most incredible computer The human brain
The worst thing to be without Hope
The deadliest weapon The tongue
The two most powerful words Can do
The greatest asset Faith
The most worthless emotion Self-pity
The worst thing you can lose Self-respect
The most satisfying work Helping others
The ugliest personality trait Selfishness
The most beautiful attire A smile!
The most prized possession Integrity
The most contageous spirit Enthusiasm
The most powerful communication Prayer

To the world, you may be just one person;
but to one person, you may be the world!

Measure wealth not by the things you have, but by the
things you have for which you would not take money.

If you bring macaroni and cheese to a covered dish supper,
don't expect to dine on lobster and filet mignon.

A coffee grinder on sale at a 90% discount is
not a great buy if you don't drink coffee.

Sunday, January 18, 2009

சத்தியத்தைக் காப்பாற்றுவோம்! - செ.ஆகாஷ்ராஜ்


தில்லையம்பலம் எனப் படும் சிதம்பரத்தில் வசித்தவர் திருநீலகண்டர். மண்பாண்டத் தொழிலாளியான இவர், சிவனடியார்களுக்கு திருவோடு செய்து வழங்கி வந்தார். "திருநீலகண்டம்' என்று சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார். திருமணம் ஆகி மனைவியுடன் இனிய இல்லறம் நடத்தி வந்தார்.

ஒருமுறை, ஒரு பொது மாதுவைப் பார்த்த நீலகண்டர், அவளிடம் மனதைப் பறிகொடுத்து விட்டார். அவள் இல்லத்தில் தங்கியிருந்தார். இந்த விஷயம், நீலகண்டரின் மனைவிக்குத் தெரிந்து விட்டது.


"நானிருக்க, இன்னொரு பெண்ணைத் தொட்ட உம்மை இனி எந்நாளும் தொட மாட் டேன்; நீரும் என்னைத் தொடக் கூடாது. இது திருநீலகண்டனாகிய சிவபெருமான் மீது ஆணை...' என்று சொல்லி விட்டாள். இறைவன் மீதே ஆணையிட்டுச் சொன்ன பிறகு, அவளுடன் பெயரளவுக்கே இல் லறம் நடத்தி, வாழ்நாளைக் கழித்து விட்டார் நீலகண்டன்.


இந்த தம்பதியர் முதுமையையும் அடைந்து விட்டனர். ஒரு துறவியின் வடிவில் அந்த வீட்டிற்கு வந்த சிவபெருமான், தன் திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்தார்.


"மகனே! இது மிகவும் விலை உயர்ந்தது. இதில் ஒருமுறை பிச்சையிட்டு விட் டால், அன்று முழுக்க அதில் இருந்து உணவு வரும். எனக்கு மட்டுமின்றி, பிற சிவனடியார்களுக்கும் இந்த உணவு பயன்படுகிறது. இதை பத்திரமாக வைத்திரு. நான் வெளியூர் செல்கிறேன். திரும்ப வந்து பெற்றுக் கொள்கிறேன்!' என்று ஒப்படைத்தார்.


நீலகண்டரும் அதை வாங்கி பத்திரமாக வைத்தார். சில நாட் களில் அதை மறையச் செய்த சிவபெருமான், மீண்டும் வந்து திருநீலகண்டரிடம் திருவோட் டைக் கேட்டார். அது காணாமல் போனதை வருத்தத்துடன் சொன்ன நீலகண்டரை, நம்பாதவர் போல சிவபெருமான் நடித்தார். "நீ பெரும் ஆசைக் காரன். நீ தான் என் திருவோட் டைத் திருடிவிட்டாய்...' என்று திட்டித் தீர்த்தார். தான் அந்த ஓட்டை திருடவில்லை எனச் சொல்லிக் கதறினார் நீலகண்டர்.

"அப்படியானால் உன் மனைவியின் கரத்தைப் பற்றி கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி சத் தியம் செய்...' என சிவன் சொல்ல, தங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்தும், தன் மனைவியை தொட முடியாமல் இருப்பது குறித்தும் சிவனிடம் சொன்னார் நீலகண்டர்.


அவரிடம் ஒரு கம்பைக் கொடுத்த சிவபெருமான், கம் பின் இரு நுனிகளையும் பிடித்து நீரில் மூழ்குமாறு உத்தரவிட்டார். இருவரும் அவ்வாறு செய்யவே, முதுமை நீங்கி, இளமையுடன் எழுந்தனர். கரையில் நின்ற துறவியைக் காணவில்லை. பின்னர், ரிஷப வாகனத்தில் சிவபார்வதி அவர்கள் முன் காட்சி தந்தனர்.

சிவன் மீது செய்த சத்தியத்தைக் காப்பாற்ற, மனைவியை வாழ்நாள் முழுவதும் தொடாமல் வாழ்ந்தமைக்காக நீலகண்டரைப் பாராட்டிய அவர்கள், தம்பதியர் மீண்டும் ஒற்றுமையாக வாழ ஆசியளித் தனர். அவரது குருபூஜை தை மாத விசாகத்தன்று நடத்தப்படுகிறது.

வயது ஒரு தடையே அல்ல... எதற்கு? - - வைரம் ராஜகோபால்


"நல்ல காரியம் செய்தவன் ஒருநாளும் கெடுவதில்லை என்பது பகவான் வாக்கு. மனிதன் ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும். நல்ல காரியம் என்றால், பிறருக்கு பயன்படக் கூடியதான ஒரு காரியம். இதைப் பணத்தாலோ, பொருளாலோ, உடல் உழைப்பாலோ செய்யலாம்.


இப்போது செய்யப்படும் தானமோ, தர்மமோ... இப்போது பலன் அளித்தாலும் அளிக்கும் அல்லது வரும் ஜென்மாக்களிலும் அளிக்கலாம். வரும் சந்ததிகளுக்கும் கூட அந்த பலன் கிடைக்கலாம். தர்மம் என்றைக்காவது பலன் கொடுத்தே தீரும். குதிரை மீது ஏறி ஊரை சுற்றிப் பார்க்கப் போனான் ஒரு ராஜா. அப்போது, வயலில் தென்னங்கன்று ஒன்றை ஒரு வயதான கிழவன் நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.


அவர் அருகில் போய் குதிரையை நிறுத்தினான். "ஓய், பெரியவரே!' என்று கூப்பிட்டான். பெரியவர் எழுந்து ராஜாவை பார்த்து கும்பிடு போட்டு நின்றார். "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டான் ராஜா.


"இங்கே இரண்டு தென்னங் கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன் மகாராஜா!' என்று அவர் பதில் சொன்னார்.


உடனே, ராஜா சிரித்து விட்டு, "ஐயா! உமக்கோ வயது தொன்னூறு இருக்கும் போல் இருக்கிறதே! இந்த வயதில் தென்னங்கன்று நட்டு, அது காய்த்து தேங்காய் சாப்பிடலாம் என்று நினைக்கிறீர்களே! அதுவரையில் உயிர் வாழவும் ஆசைப்படுகிறீர்களே?' என்று கேட்டான். அதற்கு, அவர், "மகாராஜா, எனக்கு வயதாகி விட்டது என்பது தெரியும்; இந்தத் தென்னங் கன்றுகள் வளர்ந்து காய் காய்ப்பதற்கு இன்னும் பல வருஷங்கள் ஆகும் என்பதும் எனக்குத் தெரியும். அதுவரை நான் இருப்பேனா என்பதும் சந்தேகம் தான்.


"ஆனால், இந்தத் தென்னங் கன்றுகளை எனக்காக நடவில்லை. இந்தத் தென்னங் கன்றுகள் மரமாகி, பலன் தரும்போது என் பிள்ளைகள், பேர பிள்ளைகளும் அனுபவிப்பர். அவர்களுக்காகத்தான் இதை நடுகிறேன் ராஜா!' என்றார்.


சந்தோஷப்பட்டான் ராஜா. வரும் சந்ததியினருக்காக இப்போதே இவர் இப்படி ஒரு ஏற்பாடு செய்கிறாரே என்று மகிழ்ச்சியடைந்து, ஒரு பை பொற்காசுகளை அவரிடம் கொடுத்தான்.


அதாவது, இப்போது ஏதோ ஒரு நல்ல காரியம் செய்து விடு. அது தானமாகவோ, தர்மமாகவோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இதனுடைய பலன் யாருக்கு, எப்போது கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டிராதே! அதன் பலன் கொடுக்க வேண்டிய காலத்தில், யாருக்கு கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு கொடுத்து விடும்.


மனிதன் மனிதனை ஏமாற்றுவதுண்டு; தர்மம் என்றுமே ஏமாற்றாது. பலனைக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கும்.

Friday, January 16, 2009

ஒளவையார் நூல்கள் - ஆத்திசூடி

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அ·கம் சுருக்கேல்

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்
15. ஙப் போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட உரை
18. இடம்பட வீடு எடேல்
19. இணக்கம் அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செய்யேல்
25. அரவம் ஆட்டேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செய்யேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்

ககர வருக்கம்

32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப்பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கெளவை அகற்று

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்து இரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சோ¢டம் அறிந்து சேர்
52. சையெனத் தி¡¢யேல்
53. சொற் சோர்வு படேல்
54. சோம்பித் தி¡¢யேல்

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் தி¡¢
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொன்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பி¡¢யேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெற்பயிர் விளைவு செய்
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்
பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பொ¢யாரைத் துணைக் கொள்
84. பேதைமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் பு¡¢யேல்

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93. மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
95. மேன்மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்



English Rendition of Aathisoodi
by Appuu Archie
Copyright Ramalingam Shanmugalingam - 1997)

Aathisoodi

Let us glorify the Super Energy
That people of renown fantasy.


1. Learn to love virtue.
2. Control anger.
3. Don't forget Charity.
4. Don't prevent philanthropy.
5. Don't betray confidence.
6. Don't forsake motivation.
7. Don't despise learning.
8. Don't freeload.
9. Feed the hungry and then feast.
10. Emulate the great.
11. Discern the good and learn.
12. Speak no envy.
13. Don't shortchange.
14. Don't flip-flop.
15. Bend to befriend.
16. Shower regularly.
17. Sweeten your speech.
18. Judiciously space your home.
19. Befriend the best.
20. Protect your parents.
21. Don't forget gratitude.
22. Husbandry has its season.
23. Don't land-grab.
24. Desist demeaning deeds.
25. Don't play with snakes.
26. Cotton bed better for comfort.
27. Don't sugar-coat words.
28. Detest the disorderly.
29. Learn when young.
30. Cherish charity.
31. Over sleeping is obnoxious.
32. Constant anger is corrosive.
33. Saving lives superior to fasting.
34. Make wealth beneficial.
35. Distance from the wicked.
36. Keep all that are useful.
37. Don't forsake friends.
38. Abandon animosity.
39. Learn from the learned.
40. Don't hide knowledge.
41. Don't swindle.
42. Ban all illegal games.
43. Don't vilify.
44. Honor your Lands Constitution.
45. Associate with the noble.
46. Stop being paradoxical.
47. Remember to be righteous.
48. Don't hurt others feelings.
49. Don't gamble.
50. Action with perfection.
51. Seek out good friends.
52. Avoid being insulted.
53. Don't show fatigue in conversation.
54. Don't be a lazybones.
55. Be trustworthy.
56. Be kind to the unfortunate.
57. Serve the protector.
58. Don't sin.
59. Don't attract suffering.
60. Deliberate every action.
61. Don't defame the divine.
62. Live in unison with your countrymen.
63. Don't listen to the designing.
64. Don't forget your past glory.
65. Don't compete if sure of defeat.
66. Adhere to the beneficial.
67. Do nationally agreeables.
68. Don't depart from good standing.
69. Don't jump into a watery grave.
70. Don't over snack.
71. Read variety of materials.
72. Grow your own staple.
73. Exhibit good manners always.
74. Don't involve in destruction.
75. Don't dabble in sleaze.
76. Avoid unhealthy lifestyle.
77. Speak no vulgarity.
78. Keep away from the vicious.
79. Watch out for self incrimination.
80. Follow path of honor.
81. Protect your benefactor.
82. Cultivate the land and feed.
83. Seek help from the old and wise.
84. Eradicate ignorance.
85. Don't comply with idiots.
86. Protect and enhance your wealth.
87. Don't encourage war.
88. Don't vacillate.
89. Don't accomodate your enemy.
90. Don't over dramatize.
91. Don't be a glutton.
92. Don't join an unjust fight.
93. Don't agree with the stubborn.
94. Stick with your exemplary wife.
95. Listen to men of quality.
96. Dissociate from the jealous.
97. Speak with clarity.
98. Hate any desire for lust.
99. Don't self praise.
100. Don't gossip or spread rumor.
101. Long to learn.
102. Work for a peaceful life.
103. Lead exemplary life.
104. Live amicably.
105. Don't be harsh with words and deeds.
106. Don't premeditate harm.
107. Be an early-riser.
108. Never join your enemy.
109. Be impartial in judgement.

கடவுள் வாழ்த்து

ஒளவையார் (vs) Auvaiyar

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா


Milk, clear honey, caramel and lentil
I offer you the four mixed - beautiful
Teacher with Elephant face the precious gem
Teach me Sangam Tamil in its triple form.



புண்ணியமாம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.



Do good and do away with the bad as past actions
Are savings in this life - come to think
All religions preach no more but this
Harm not but do good.


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பொ¢யார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.


Castes are only two and no more to speak of
According to doctrines on Justice - In life
Givers superior non-givers inferior
So say great books about caste.


இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.


This body is a natural bag of pain
Don't believe in this unreal fed mortal body - Rush
To give the deserving if you are charitable
Before retribution catches enjoy inner peace.


எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.


Benefits for some from deeds aimed
Ineffective unless done right - Otherwise
Similar to the blind targeting a mango with his cane
Proper place and time determine aim.


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.


If unwanted it will never come even for cries
The wanted will never leave even when rejected
Don't fret constantly not knowing this
Dying in pain seems human vocation.


உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு.


Working hard confer measured comforts of life
No more no less in this life - Sea
Voyages searching for comforts immaterial
For this animate body.


எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.


Come to think of it by any standard this body
Is home for host of cruel pathogen - The wise
Knows this hence like water on lotus leaf
Their detachment is kept secret from the rest.


ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மா¢யாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தா¢யாது காணும் தனம்.


Many are the ways to get rich but working hard
Only determines the quantum - Hence
Amass Respect inhabitants of this world
Since material wealth is highly volatile.


ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.


Like when the riverbed that burns the feet if dry
Helps the world from under-water spring - Aid seekers
From people of noble birth even in hard times
Never get turned away agreeably.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்.


Wailing and wallowing at death anniversaries
Don't resurrect the dead you earthlings- Cries unwanted
We also meet the inevitable death and until our demise
Think what can we do? Feed, be fed and be merry.


ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது.


ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்ே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்க.


ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல.


பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.


சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும.


தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.


செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?


பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.


சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அ¡¢சிக்கே நாம்.


அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.


நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்.


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.


வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.


நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை.


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.


ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவா¢னும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.


உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.


மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.


தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி.


இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.


ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.


வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.


கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.


பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.


நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.


வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி.


நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.


முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் கா¡¢கையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.


தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

Thursday, January 15, 2009

Hudson River hero is ex-Air Force fighter pilot - REAL HERO


After the pilot safely landed the U.S. Airways plane into the Hudson River today, people began to quickly call him a hero.

New York Mayor Michael Bloomberg said he did a "masterful job." New York Gov. David Paterson said he averted a tragedy. But Chesley B. "Sully" Sullenberger, III, the pilot who helped save the 155 passengers and crew from the freezing waters off Manhattan was just doing his job.

Sullenberger, a 57-year-old Danville, Ca. resident, has been flying planes for over 40 years and is a former Air Force fighter pilot.

Since 1980, he has been a pilot with U.S. Airways, where he trained other pilots, helped streamline passenger service, led efforts to improve safety at airports, aided the National Transportation Safety Board in investigating accidents, and co-wrote a technical paper with NASA on crew decision-making errors.

From 1973 to 1980, he was an F-4 pilot for the Air Force. He flew missions in Europe and over the Pacific as a commander.

Sullenberger graduated with a bachelors in psychology from the U.S. Air Force Academy and went on to earn a masters in industrial psychology from Purdue University in West Lafayette, Ind. He also has a masters in public administration from the University of Northern Colorado in Greeley, Colo.

In addition to his work as a pilot, he is the president of Safety Reliability Methods, Inc., a company that provides management, safety, performance and reliability consulting to various businesses.

He is also a member of the Air Line Pilots Association, where he previously served as a safety chairman. Sullenberger was recently named a visiting scholar at the Center for Catastrophic Risk Management at the University of California, Berkeley.

by Sharon Adarlo/The-Star-Ledger,
Thursday January 15, 2009, 7:32 PM